Lyrics

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை

என்றுறை செய்தேனன்றோ

கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்

உன்னை காத்திடும் பெலவானன்றோ

விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ

பயம் வேண்டாம் உன் அருகில் நான்

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை

என்ன வந்தாலும் பயமே இல்லை

மாறாத இயேசு உண்டெனக்கு

மனது ஒருபோதும் கலங்கவில்லையே

ஏழை எனக்கு அடைக்கலமே அவர்

புயலில் என் கன்மலையே

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ

தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே

நல்வசனத்தின் வல்லமையாய்

வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே

எலியாவின் தேவன் எங்கே என்ற

அற்புதம் நடந்திடுமே

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top