lyrics

நன்றி என்று சொல்லுவோம்
நல்ல தேவன் கிருபை செய்தார்

                               நன்மைகளை நினைத்துக் கொண்டு
                               நன்றியுள்ள துதியுடன்
                               நன்றி நன்றி ஐயா
                               நன்றி இயேசையா

1.உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா
என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா
சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே
புது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

2.பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா
உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா
என்னை வாலாக்காமல் தலையாக்கினீர்
என்னை கீழாக்காமல் மேலாக்கினீர்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

3.வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே
இரும்பு தாழ்ப்பாக்கள் முறித்து விட்டீரே
நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை
எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

4.பரலோகில் என்னையும் நீர் கொண்டு சொல்லுவீர்
பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர்
நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை
பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top