Melody Notes
Lyrics
சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம்
அவர் சொல்லும்போது எப்படி நடக்கும் யாருக்கும் தெரியாது
அவர் செய்த பின்பு எப்படி நடந்தது எவருக்கும் புரியாது
உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர்
போகும்போது யாக்கோபாக ஓடினேன்
திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன்
பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும் கிருபை விலகல
அவர் உண்மை என்னை சூழ்ந்ததால சற்றும் சருக்கல
அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம்
அவர் உண்மை செய்த நன்மைகளோ பல ஆயிரம்
நான் இருந்ததற்கும் இருப்பதற்கும் சம்பந்தம் கிடையாது
அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல வார்த்தைகள் கிடையாது
உண்மை உள்ளவரே சொன்னதை செய்பவரே
தருவேன் என்பதை முழுவதும் தந்தீரே
தானனா தானனா தானனனானனா
என்னைப்போல் ஒருவனுக்கும் உண்மை உள்ளவரே
தானனா தானனா தானனனானனா
மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே